கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்... தூக்கி வீசப்பட்டு 2 பேர் உயிரிழப்பு..!

Published : Jun 05, 2019, 06:18 PM IST
கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்... தூக்கி வீசப்பட்டு 2 பேர் உயிரிழப்பு..!

சுருக்கம்

தாராபுரத்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 தாராபுரத்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தாராபுரம் தொண்டாமுத்தூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குமரன் (48). இவர் நேற்று தேர்பாதை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே அதேபகுதியில் சேர்ந்த ஈஸ்வரன் (46) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

 

வேகமாக வந்த 2  இருசக்கர வாகனங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ஈஸ்வரன் மற்றும்  குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் விஜய்! டிச.16ல் கொங்கு மண்டலம் குலுங்கப் போகுது! செங்ஸ் போட்ட பிளான்
ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?