தலைக்கேறிய போதை.. தெளியாத மப்பு.. ஆண் ஒருவரை அடித்து.. ஆபாசமாக பேசி வாண்டடாக வம்பிழுத்த குடிமகள்.!

By vinoth kumarFirst Published Jun 28, 2022, 12:33 PM IST
Highlights

 திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு ஏராளமான பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் போதையில் தலைக்கேறி வலம் வந்த பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று எடுத்து நடத்தி வருகிறது. காலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் முன்னரே குடிமகன்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். சிலர் பிளாக்கில் சரக்கு வாங்கி மூக்கு முட்ட குடித்துவிட்டு காலையிலேயே போதையை மட்டையாகி விடுகின்றனர். இதில், பெண்களும் விதிவிளக்கல்ல என்பதை காட்ட பல இடங்களில் போதையில் பொது இடங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;- TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!

இதையும் படிங்க;- ''ஐயோ என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே".. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி..திருமணமான 7 நாளில் புதுமாப்பிள்ளை பலி

இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு ஏராளமான பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் போதையில் தலைக்கேறி வலம் வந்த பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் ஆண் ஒருவரை அடித்து வம்பிற்கு இழுத்ததோடு ஆபாசமாக பேசியது சுற்றித்திரிந்தது, பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. தற்போது அந்தப் பெண் போதை ஆசாமி செய்த அட்டூழிய செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

click me!