கடலூரிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

Published : Mar 11, 2025, 06:11 PM IST
கடலூரிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

சுருக்கம்

கடலூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுராந்தகம் அருகில் விபத்துக்குள்ளானது.

Cuddalore-Kilambakkam bus accident: Complete information நாளுக்கு நாள் பேருந்துகளின் விபத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிர் சேதமும் அதிகரிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தனி அருகில் டிப்பர் லாரியானது அரசு பேருந்து மீது விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், கிட்டத்தட்ட 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் தான் இன்று கடலூரிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. கடலூரிலிருந்து கிளம்பிய அரசு பேருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகில் வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னே சென்ற அரசு பேருந்தை முந்த சென்ற போது டிரைவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!