எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

By vinoth kumarFirst Published Nov 8, 2022, 3:35 PM IST
Highlights

கல்லூரி மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கல்லூரி மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகள் கிருத்திகா (19). இவர் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். வழக்கம் போல நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு அப்படியே கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் சென்றுவிட்டு  இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்து வெளியே அவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த ரயில் நிலையத்திற்கு வந்த கிருத்திகா எதிர்பாராத விதமாக திருச்செந்தூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்துள்ளார். 

இதையும் படிங்க;- டிக்டாக் வீடியோ போடாத.! சினிமா துணை நடிகையை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.!

இதில், கிருத்திகா உடல் சிதறி கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து மயிலாடுதுறை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- நள்ளிரவில் விபத்துக்குள்ளான சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்..! பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு..

முதற்கட்ட விசாரணையில் மாமா மகனை திருமணம் செய்து வைக்கக்கோரிய மாணவி கூறியுள்ளார். இதற்கு பெற்றோர் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறியதை ஏற்காத மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க;- திருமணமான 3வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை.. ரோட்டில் விழுந்து கதறிய மனைவி..!

click me!