மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்று வந்த விபச்சாரம்.. அறைகுறை ஆடையுடன் 20 வயது இளம்பெண்கள் மீட்பு..!

By vinoth kumarFirst Published Jun 17, 2021, 5:50 PM IST
Highlights

கோவையில்  மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் படுஜோராக நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவையில்  மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் படுஜோராக நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவை சரவணம்பட்டி மகாநகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விபசாரம் நடத்திய கேரளாவை சேர்ந்த அஜித்மோன் (32),  மகந்த்ஷா (26) ஆகியோரை கைது செய்தனர்.

 மேலும் அங்கு வங்கதேசத்தை சேர்ந்த 20 வயது அழகி உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர். இதில்,  வங்கசேத்தை சேர்ந்த பெண் பாஸ் போர்ட் இல்லாமல் மேற்கு வங்கம் வழியாக கோவை வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 2 அழகிகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!