சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. நாளை இந்த பகுதிகளில் 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!

By vinoth kumarFirst Published Aug 5, 2022, 8:36 AM IST
Highlights

பராமரிப்புப் பணி காரணமாக நாளை சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக நாளை சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தவகையில், இன்று சென்னையில் மின்தடை ஏற்படபோகும் முக்கிய இடங்கள் எவை எவை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க;- இன்று சென்னையில் இந்தந்த பகுதிகளில் மின்தடை! மக்களே மதியம் 2 மணி வரை கரண்ட் இருக்காது!

அண்ணா சாலை பகுதி: வெங்கடேச கிராமணி தெரு, புது பங்களா, நாகமணி தெரு, ECR சாலை, ஐயா சாமி தெரு, முனியப்பிள்ளை தெரு, டிப்போ சந்து, ஹரிஸ் சாலை, எழும்பூர் நீதி மன்றம், லாசர் சர்ச் தெரு, உலகப்பா தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர் பகுதி: டீச்சர்ஸ் காலனி, வில்லிவாக்கம் சாலை, சாரதி நகர், சரஸ்வதி நகர், கலைமகள் நகர், கடப்பா சாலை.

பொன்னேரி பகுதி: தேர்வாய் கண்டிகை, கரடிபுதுர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணன்கோட்டை, சின்னபுலியூர், பெரிய புலியூர், சிறுவாடா மற்றும் என்.எம்.கண்டிகை.

தாம்பரம் பகுதி: முடிச்சூர் காமராஜ் நெடுஞ்சாலை, புதிய பெருங்களத்தூர், கஜபுஜெந்தர் நகர், சித்ரா அவென்யூ, எம்.கே.பி நகர், எஸ்.வி.ராகவன் ரோடு வண்டலூர் கலைஞர் நெடுஞ்சாலை – 1 முதல் 7வது தெரு, சூராத்தம்மன் கோயில் தெரு, அர்ச்சனா நகர், மணிமேகலை தெரு, வளையாபதி தெரு ஸ்ரீராம் காந்தி ரோடு, அண்ணா தெரு, காமராஜர் நகர், பீர்க்கன்கரணை பெருங்களத்தூர் காந்தி தெரு, சேகர் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குண்டுமேடு குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் கோயில் தெரு, சீனிவாசா நகர், ஜவகர்லால் தெரு, புத்தர் நகர், சத்தியமூர்த்தி ரோடு, ராஜாமணி தெரு, மணிமேகலை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- பேருந்து மீது அசுர வேகத்தில் மோதிய கார்!தூக்கி வீசப்பட்ட இன்ஜின்!சிதறிய 4 பேர் உடல்கள்! கலங்க வைக்கும் சம்பவம்

click me!