தலைநகரில் மின்னல் வேகத்தில் பரவும் தொற்று.. தமிழகத்தில் 7000ஐ நெருங்கும் பாதிப்பு.. உயிரிழப்பும் உயர்வு..!

Published : Apr 12, 2021, 07:09 PM ISTUpdated : Apr 13, 2021, 06:26 PM IST
தலைநகரில் மின்னல் வேகத்தில் பரவும் தொற்று.. தமிழகத்தில் 7000ஐ நெருங்கும் பாதிப்பு.. உயிரிழப்பும் உயர்வு..!

சுருக்கம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,711பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,40,145ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,711பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,40,145ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 6,711 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,40,145ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 2,105 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,181ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 82,982 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,06,03,108 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,036 பேர் ஆண்கள், 2,675 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,67,514 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,72,595 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 2,339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,80,910ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 19 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,927ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,308 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!