தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6000ஐ நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6000ஐ நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில்5,989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,26,816ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும்1,977 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,63,129ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 83,895 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,04,31,588 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,652 பேர் ஆண்கள், 2,337 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,59,486 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,67,294 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 1,952 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,76,257 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 23 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் 16 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,886ஆக அதிகரித்துள்ளது. தற்போது 37,673 பேர் சிகிச்சையில் உள்ளனர்.