புதுச்சேரியில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல்…. முக்கிய அறிவிப்பு இன்று வெளியகிறது…!

manimegalai a   | Asianet News
Published : Sep 22, 2021, 09:24 AM IST
புதுச்சேரியில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல்…. முக்கிய அறிவிப்பு இன்று வெளியகிறது…!

சுருக்கம்

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரியில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று நண்பகல் வெளியாகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரியில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று நண்பகல் வெளியாகிறது.

 

 

புதுச்சேரி யூணியன் பிரதேசத்தில் இதுவரை 2 முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடைசியாக கடந்த 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வார்டு மறுவரை செய்யப்பட்டு இடஒதுக்கீடு முறை அறிவிக்கப்பட்டது.

 

இதன் தொடர்ச்சியாக, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், வாக்குப்பதிவு நாள் உள்ளிட்ட விவரங்களை இன்று நண்பகல் 12 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவிக்கிறார். புதுச்சேரியில் 5 நகராட்சி சேர்மன் பதவிகள்,  10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள ஆயிரத்து 149 பதவிகளுக்கும், 116 நகராட்சி கவுன்சிலர் பதவி, 108 கிராம பஞ்சாயத்து தலைவர், 812 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. வார்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 936 பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். தமிழ்நாட்டைப் போல் அல்லாமல், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து  4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!