வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி! சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Published : Jul 13, 2024, 06:51 AM ISTUpdated : Jul 13, 2024, 06:58 AM IST
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி! சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

சுருக்கம்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் S-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை X மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பு KEC CMRL பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து சீராக செல்ல வேண்டி பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

மெட்ரோ ரயில் பணி காரணமாக மடிப்பாக்கம், மேடவாக்கத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் S-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை X மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பு KEC CMRL பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து சீராக செல்ல வேண்டி பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் குட்நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

* கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் இடது புறம் திரும்பி Lake view Road-ல் இருந்து வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.

* மடிப்பாக்கம் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்பி சபரி சாலை axis bank வழியாக வந்து வலது புறம் திரும்பி Lake view Road-ல் இருந்து மீண்டும் வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம். 

* கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!