இதை செய்தால் ரேஷன்கார்டு ரத்தாகிவிடும்... அரசின் புதிய எச்சரிக்கை; கார்டுதாரர்களே உஷார்!

Published : Mar 12, 2025, 12:07 PM IST
இதை செய்தால் ரேஷன்கார்டு ரத்தாகிவிடும்... அரசின் புதிய எச்சரிக்கை; கார்டுதாரர்களே உஷார்!

சுருக்கம்

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Government warns ration card holders:வறுமைக்கோட்டை போக்கும் வகையில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டி, இலவசமாகவும் மானிய விலையிலும் உணவுப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அதன்படி, ரேஷன் கார்டு வழங்கப்பட்டு, நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் தரப்படுகின்றன.

மாதந்தோறும் நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமை, மானிய விலையில் சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட  அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டு வைத்துள்ளோருக்கு மகிழ்ச்சி.. முதியோர்களுக்கு புது வசதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

எனினும் ஒருசிலர் ரேஷனில் வழங்கப்படும் இலவச அரிசியை வாங்கி, தங்கள் தேவை போக எஞ்சியவற்றை வெளி நபர்களுக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பான புகார்கள் அவ்வப்போது உணவு மற்றும் நுகர்பொருட்கள் வினியோகத் துறைக்கு சென்ற வண்ணம் இருந்தன.

இந்த நிலையில்,  ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரசு தரப்பில் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று தரப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள், பொது விநியோக திட்டத்தின் கீழ் பெறப்படும் பொருட்களை விற்பனை செய்வதும், பதுக்குவதும் சட்டப்படி குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட எந்த பொருளையும் பொது சந்தையில் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்றால் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களின் ரேஷன் கார்டுகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும் அரசு தரப்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் பெயர் மாற்ற, நீக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!