கொரோனாவின் கோரப்பசிக்கு ஒரே நாளில் 364 பேர் பலி... 33 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 18, 2021, 8:38 PM IST
Highlights

கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா நிலவரம் குறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையின் படி,  தமிழகத்தில் இன்று மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 463 மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 33 ஆயிரத்து 047 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த 12 பேரும் அடக்கம்.  இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை  2 கோடியே 54 லட்சத்து 956 ஆயிரத்து 799 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால்  364 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 18,369 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 192 பேரும், தனியார் மருத்துவமனையில் 172 பேரும் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் மட்டும் 21 ஆயிரத்து 362 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 14 லட்சத்து 03 ஆயிரத்து 052 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2 லட்சத்து 31 ஆயிரத்து 596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

click me!