சென்னை: காவல் நிலைய குடோனில் மாயமான 770 கிலோ புகையிலை பொருட்கள் - வெளியான CCTV காட்சி.!

Published : Jan 06, 2024, 02:31 PM IST
சென்னை: காவல் நிலைய குடோனில் மாயமான 770 கிலோ புகையிலை பொருட்கள் - வெளியான CCTV காட்சி.!

சுருக்கம்

காவல் நிலைய குடோனில் 770 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

சென்னை ஓட்டேரி த்தில் உள்ள குடோனில் இருந்து 770 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மாயமானதை அடுத்து, சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதிர்ச்சியூட்டும் வகையில், நகர உளவுத்துறை தலைமைக் காவலர் வெங்கடேஷ் குட்காவைத் திருடி, காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்த ஒரு நடைபாதை வியாபாரிக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். விசாரணையில் மேலும் சில போலீசார் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் ஆஸ்ரா கர்க்கிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. விரைவில் இந்த மோசடியில் ஈடுபட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்படும்  என்று தெரிய வந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. 50 சதவீத அகவிலைப்படி + 49,420 ரூபாய் சம்பள உயர்வு கிடைக்கும்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Chennai Weather: சுதந்திர தினம் வரை மழைதான்! தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?