தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா..! 585 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு

By karthikeyan VFirst Published Jun 4, 2020, 6:51 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27256ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27256ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. அதிகமான தொற்று பாதிப்பை கண்டறியும் விதமாக, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவிற்கு, அதிகபட்சமாக 16,447 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இன்று 16,447 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 1384 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 27,256ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் 1072 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18693ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மொத்த பாதிப்பு 8563ஆக உள்ளது. இன்று 585 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 14901ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 12 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளது. 
 

click me!