உலக சூப்பர் சீரிஸ் போட்டியில் சிந்துவுக்கு முதல் வெற்றி…

 
Published : Dec 15, 2016, 11:18 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
உலக சூப்பர் சீரிஸ் போட்டியில் சிந்துவுக்கு முதல் வெற்றி…

சுருக்கம்

உலக சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் போட்டியை இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றியோடு தொடங்கினார்.

துபையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றுள்ள சிந்து தனது முதல் ஆட்டத்தில் 12-21, 21-8, 21-15 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியைத் தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 12-21 என்ற செட் கணக்கில் இழந்த சிந்து, அடுத்த செட்டில் அபாரமாக ஆட, அந்த செட் 21-8 என்ற கணக்கில் அவர் வசமானது.

தொடர்ந்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டிலும் அசத்தலாக ஆடிய சிந்து, அந்த செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றியில் முடித்தார்.

சிந்து தனது 2-ஆவது ஆட்டத்தில் சீனாவின் சன் யூவை சந்திக்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!