
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் உக்ரைனின் எலினோ விட்டோலினா.
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இதில், மகளிர் பிரிவு அரையிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனை சைமன் ஹலேப் 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் விட்டோலினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கொன்டவிட்டை வென்று இறுதிக்கு தகுதி பெற்றார்.
இறுதிச் சுற்றில் உக்ரைனின் விட்டோலினாவும் - உலகின் முதல்நிலை வீராங்கனை ருமேனியாவின் சைமன் ஹலேப்பும் மோதினர்.
இதில் 6-0, 6-4 என நேர் செட்களில் ஹலேப்பை வீழ்த்திய விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.