உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கே முதலிடம்...

Asianet News Tamil  
Published : Mar 13, 2018, 11:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கே முதலிடம்...

சுருக்கம்

World Cup trophy tournaments india is first place

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கப்பட்டியலில் இந்தியாவே முதலிடம் பெற்று அசத்தியுள்ளது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மெக்ஸிகோவில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நிறைவடைந்த இந்தப் போட்டியில் 4 தங்கம், ஒரு வெற்றி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுச் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது இது முதல் முறையாகும்.

இந்தப் போட்டியில் ஷாஸார் ரிஸ்வி, அகில் ஷியோரன், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகிய வீரர்களும், மானு பேக்கர் என்ற வீராங்கனையும் தங்கம் வென்றனர். 

வெள்ளியை அஞ்சும் முட்கில் என்ற வீராங்கனை கைப்பற்ற, ஜிது ராய், ரவி குமார் உள்ளிட்ட 3 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இதனிடையே, கடைசி நாளில் நடைபெற்ற ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லவில்லை. தகுதிச்சுற்றில் ஸ்மித் சிங் 116 புள்ளிகளுடன் 15-வது இடமும், அங்கத் பாஜ்வா 115 புள்ளிகளுடன் 18-வது இடமும், ஷீராஸ் ஷேக் 112 புள்ளிகளுடன் 30-வது இடமும் பிடித்தனர். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!