
மகளிர் ஹாக்கி போட்டியில் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றது இந்தியா.
மகளிர் ஹாக்கி போட்டி நேற்று தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை குருஜித் கௌர் அற்புதமாக கோல் அடித்து இந்திய அணியின் கணக்கை தொடக்கி வைத்தார். பின்னர் 14-வது நிமிடத்தில் தீபிகா 2-வது கோலை பதிவு செய்தார்.
இதனையடுத்து இந்திய அணி கொரியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. மேலும் சிறப்பான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தி கொரிய வீராங்கனைகளை திணறடித்தது.
இந்த நிலையில், 47-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பூணம் ராணி ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
கடைசியாக கொரிய வீராங்கனை மீ ஹியூன் பார்க் 57-வது நிமிடத்தில் அந்த அணிக்கு ஆறுதல் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.