இரண்டே மாதங்களில் தரவரிசையில் முன்னேற்றம் காணமுடியும் – அடித்துக் கூறுகிறார் ஸ்ரீகாந்த்…

 
Published : Feb 28, 2017, 11:34 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
இரண்டே மாதங்களில் தரவரிசையில் முன்னேற்றம் காணமுடியும் – அடித்துக் கூறுகிறார் ஸ்ரீகாந்த்…

சுருக்கம்

within two months i can develop my performance

எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் இரண்டே மாதங்களில் தரவரிசையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஸ்ரீகாந்த தெரிவித்தார்.

ஜெர்மன் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி ஜெர்மனியின் முல்ஹெய்ம் அன் டெர் ரூர் நகரில் நாளை தொடங்குகிறது.

முழங்கால் காயத்திலிருந்து மீண்டுள்ள இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தப் போட்டியில் பட்டம் வென்று ஃபார்முக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறார்.

அவர் தனது முதல் சுற்றில் ஸ்லோவேகியாவின் ஆலென் ரோஜை சந்திக்கிறார்.

இது குறித்து போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் கூறியதாவது:

“நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அதேநேரத்தில் எல்லா போட்டிகளிலும் அவசரமாக பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தரவரிசையைப் பற்றி கவலைப்படுவது இல்லை. நல்ல உடற்தகுதியை எட்டிவிட்டால் எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் இரண்டே மாதங்களில் தரவரிசையில் முன்னேற்றம் காண முடியும்' என்றார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!