
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் லூக் வீரர் ஷிவா கேசவன், ஸ்கீ வீரர் ஜெகதீஷ் சிங் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் லூக் வீரர் ஷிவா கேசவன், ஸ்கீ வீரர் ஜெகதீஷ் சிங் ஆகியோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் ஷிவா கேசவன் 6-வது முறையாகவும், ஜெகதீஷ் சிங் முதல் முறையாகவும் குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிடுகின்றனர்.
ஷிவா கேசவன் முதல் முறையாக 1998-ல் ஜப்பானில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 2002, 2006, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
இதில் 1998, 2002 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் ஷிவா மட்டுமே பங்கேற்ற நிலையில், இதர ஒலிம்பிக்கில் ஷிவாவுடன் மொத்தமாக 6 இந்தியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.