தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க போவது யார்?

 
Published : Apr 24, 2017, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க போவது யார்?

சுருக்கம்

Who will participate in the National Womens Chess tournament?

ஜூலை மாதம் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க போவது யார்? என்ற வினாக்கு பதிலளிக்க போகிறது திருவாரூரில் தொடங்கியுள்ள மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி.

திருவாரூரில் மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டி ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நடைபெறும்.

திருவாரூர் மாவட்ட செஸ் சங்கம், சிஏ ஹோண்டா நிறுவனம் சார்பில் நடைபெறும் 45-ஆவது மாநில மகளிர் செஸ் போட்டியில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதனை மருத்துவர் செந்தில் தொடங்கி வைத்தார்.

இதில், முதலிடம் பெறும் நான்கு பேர் ஜூலை மாதம் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க தகுதி பெறுவர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!