மான்டி கார்லோ மாஸ்டர்ஸில் பத்தாவது முறையாக வாகை சூடினார் நடால்…

 
Published : Apr 24, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
மான்டி கார்லோ மாஸ்டர்ஸில் பத்தாவது முறையாக வாகை சூடினார் நடால்…

சுருக்கம்

Natalie Carlo Masters was the tenth ...

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பத்தாவது முறையாக ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நேற்று நடைபெற்றது.

இதன் இறுதிச் சுற்றில் நடால் - சகநாட்டவரான ஆல்பர்ட் ரேமோஸ் வினோலஸுடன் மோதினார்.

இதில், நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஆல்பர்ட்டை தோற்கடித்தார்.

இந்தப் போட்டியில் 10-ஆவது முறையாக சாம்பியனாகியிருக்கிறார் நடால்.

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 2005 முதல் 2012 வரை தொடர்ச்சியாக 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால், 2013-இல் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.

கடந்த ஆண்டு இங்கு 9-ஆவது பட்டத்தை வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் 10-ஆவது பட்டத்தைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கும் நடால், அடுத்ததாக பார்சிலோனா ஓபனில் களமிறங்குகிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!