
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பத்தாவது முறையாக ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நேற்று நடைபெற்றது.
இதன் இறுதிச் சுற்றில் நடால் - சகநாட்டவரான ஆல்பர்ட் ரேமோஸ் வினோலஸுடன் மோதினார்.
இதில், நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஆல்பர்ட்டை தோற்கடித்தார்.
இந்தப் போட்டியில் 10-ஆவது முறையாக சாம்பியனாகியிருக்கிறார் நடால்.
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 2005 முதல் 2012 வரை தொடர்ச்சியாக 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால், 2013-இல் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.
கடந்த ஆண்டு இங்கு 9-ஆவது பட்டத்தை வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் 10-ஆவது பட்டத்தைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கும் நடால், அடுத்ததாக பார்சிலோனா ஓபனில் களமிறங்குகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.