
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை, அனைத்து இன்னிங்ஸ்களிலும் சதமடித்தாலும்கூட திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரோடு யூனிஸ் கான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் அணியின் நலனுக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுவேன்” என யூனிஸ்கான் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு அது முற்றிலும் தவறு என்று மறுத்துள்ளார் யூனிஸ்கான்.
"எனது ஓய்வு முடிவு குறித்து ஏராளமான வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. யூனிஸ் கான் தொடர்ந்து விளையாட விரும்புகிறார் என்றெல்லாம் பரப்புகிறார்கள். அதில் உண்மையில்லை. ஓய்வு பெறுவது என்ற முடிவை நான் சுயமாகவே எடுத்திருக்கிறேன்.
மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் அனைத்து இன்னிங்ஸ்களிலும் சதமடித்தாலும்கூட, எனது ஓய்வு முடிவில் மாற்றம் இருக்காது. நான் ஏற்கெனவே அறிவித்தபடி மேற்கிந்தியத் தீவுகள் தொடரோடு ஓய்வு பெறுவேன்' என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.