
வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தெறிக்கவிட்டு உள்ளார்.
வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி தொழில்முறை வீரர்கள் ஸ்குவாஷ் சங்கத்தின் (பிஎஸ்ஏ) சார்பில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் வேலவன் - தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஐசெல் மோதினார்.
இதில், 16-14, 15-13, 11-7 என்ற நேர் செட்களில் டிரிஸ்டான் ஐசெலைத் தோற்கடித்தார் வேலவன்.
கடந்த 10 நாள்களில் இரண்டாவது முறையாக சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார் வேலவன்.
அடுத்ததாக வேலவன் எகிப்தின் முகமது எல்ஷெர்பினியை சந்திக்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.