அசத்தலான ஆட்டத்தால் இந்தியாவின் வேலவன் அரையிறுதிக்கு முன்னேற்றம்…

Asianet News Tamil  
Published : Apr 21, 2017, 11:36 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
அசத்தலான ஆட்டத்தால் இந்தியாவின் வேலவன் அரையிறுதிக்கு முன்னேற்றம்…

சுருக்கம்

Indias Velan semi-final progress

வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் அசத்தலாக ஆடி இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் அரையிறுதிக்கு முன்னேறினார்.

வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி, தொழில்முறை வீரர்கள் ஸ்குவாஷ் சங்கத்தின் (பிஎஸ்ஏ) சார்பில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் காலிறுதியில் வேலவன் - போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் லையீட் புல்லாருடன் மோதினார்.

இதில், 7-11, 11-5, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் புல்லாரை வீழ்த்தினார் வேலவன்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியரான ஹரிந்தர் பால் சாந்து – எகிப்தின் முகமது எல்ஷெர்பினுடன் மோதினார்.

இதில் 10-12, 11-9, 7-11, 10-12 என்ற செட் கணக்கில் முகமதுவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் ஹரிந்தர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அவுட்டான கடுப்பில் மைதானப் பொருட்களை சேதப்படுத்திய கே.கே.ஆர் வீரர்.. செக் வைத்த பிசிசிஐ!
MS Dhoni: இனி கிரவுண்டுக்கே வர மாட்டார்..? அணிக்கு திரும்பாத தோனியால் ஏக்கத்தில் ரசிகர்கள்..