ரோஹித்தின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளிய ஜாம்பவான்!!

By karthikeyan VFirst Published Nov 13, 2018, 5:06 PM IST
Highlights

விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் தருணங்களை எல்லாம் நன்கு பயன்படுத்திக்கொண்ட ரோஹித் சர்மா, சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி ரசிகர்களை மட்டுமல்லாமல் முன்னாள் ஜாம்பவான்களையும் கவர்ந்துள்ளது. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக விராட் கோலி திகழ்ந்தாலும் அவரது கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஆனால் ரோஹித் சர்மா மிகச்சிறந்த கேப்டனாக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். தனது கேப்டன்சி திறனை பலமுறை நிரூபித்துள்ளார். 

விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் தருணங்களை எல்லாம் நன்கு பயன்படுத்திக்கொண்ட ரோஹித் சர்மா, சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். களவியூகம், வீரர்களை கையாளும் திறன், பவுலர்களை பயன்படுத்தும் விதம் என அனைத்திலுமே சிறப்பாக செயல்படுகிறார் ரோஹித் சர்மா. 

கடந்த ஆண்டில் நிதாஹஸ் டிராபி, அண்மையில் ஆசிய கோப்பை, தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் என ஒரு கேப்டனாக வெற்றிகளை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை எதிரணிகளை ஒயிட்வாஷ் செய்தது, 12 போட்டிகளில் 11 வெற்றி என கேப்டனாக மிரட்டிவருகிறார் ரோஹித். 

இந்நிலையில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியால் கவரப்பட்ட முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன், ரோஹித்தின் கேப்டன்சியை புகழ்ந்துள்ளார். இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில், ரோஹித்தின் கேப்டன்சியில் மீண்டும் ஒருமுறை கவர்ந்திழுக்கப்பட்டுள்ளேன். ரோஹித் சிறப்பாக கேப்டன்சி செய்கிறார். அவர் வீரர்களை கையாளும் முறை பிரமிப்பாக இருக்கிறது. களவியூகங்களை சிறப்பாக வகுத்து திறம்பட செயல்படுத்துகிறார். கேப்டன் பொறுப்பை சுமந்திருந்தாலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்து அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்கிறார் என்று ரோஹித்தை புகழ்ந்துள்ளார் லட்சுமணன்.
 

click me!