இந்தியாவின் தோல்வியைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் ரசிகர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை…

Asianet News Tamil  
Published : Jun 20, 2017, 08:50 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
இந்தியாவின் தோல்வியைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் ரசிகர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை…

சுருக்கம்

Unable to bear the defeat of India the cricket fan fled before the train and committed suicide

பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்ததைத் தாங்க முடியாமல், வங்கதேசத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பெற்றியது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா தோற்றதைத் தாங்க முடியாமல், வங்கதேசத்தின் ஜமல்பூரில் உள்ள 25 வயது இந்திய கிரிக்கெட் ரசிகரான பித்யுத், நேற்றிரவு இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் தகவலை வங்கதேச காவல்துறையும் உறுதி செய்து அறிவித்துள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எல்லை மீறி போறீங்க டா.. RCBக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டிய CSK..! BCCIயிடம் முறையீடு..
CSK Replacement: கலீல் அவுட், CSK-க்கு அடுத்தது யார்? இந்த 3 பௌலர்கள் தான் லிஸ்ட்ல இருக்காங்க!