
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவில் மகளிருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அணி சாம்பியன் வென்றது.
கடந்த பிப்ரவரி 25 முதல் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தேசிய அளவில் 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
அரை இறுதியில் விளையாட குருஷேத்திரா, அண்ணாமலை, திருவள்ளுவர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக அணிகள் தகுதி பெற்றன.
பின்னர் நடைபெற்ற இறுதிச் சுற்றில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அணி 2-0 கோல் கணக்கில் அண்ணாமலை பல்கலைக்கழக அணியைத் தோற்கடித்து வெற்றியை தட்டிச் சென்றது.
பரிசளிப்பு விழாவில் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி தலைவர் கோசி மேத்யூ, துணை வேந்தர் ஏ.எம்.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.