
அடுத்த வருடம் நடைபெறுவதாக இருந்த ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஐசிசியில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
ஐசிசியில் இருந்து வெளியான தகவல்
'2018-ல் நடைபெறுவதாக இருந்த டி-20 உலகக் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பெரும்பாலான அணிகள் அதிக அளவில் இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளன. அதனால் டி-20 உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பில்லை.
2020-ல் மீண்டும் டி-20 உலகக் கோப்பை போட்டி நடைபெறும். அது தென் ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவில் நடைபெறலாம்” என்று வெளியானது.
இதுகுறித்து அதிகாரப் பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.