
மகளிர் உலக வலைகோல் பந்தாட்ட லீக்கின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை துவம்சம் செய்தது.
கனடாவின் வான்கோவர் நகரில் மகளிர் உலக வலைகோல் பந்தாட்ட லீக் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் ராணி கோலடித்தார். இதனால் இந்திய அணி 3-ஆவது கால் ஆட்டம் வரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதேசமயத்தில் சரிவிலிருந்து மீள்வதற்கு தொடர்ந்து போராடிய உருகுவே அணி 45-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, ஸ்கோர் சமனானது.
அடுத்த 4-ஆவது நிமிடத்தில் வந்தனா கேத்ரியா கோலடிக்க, இந்தியா 2-1 என மீண்டும் முன்னிலைப் பெற்றது.
ஆனால், 54-ஆவது நிமிடத்தில் இந்திய பின்கள வீராங்கனைகள் செய்த தவறால் உருகுவே அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதில், அந்த அணி கோலடிக்க, ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் மீண்டும் சமனாகி விறுவிறுப்பை ஏற்படுத்தின.
இதனையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்திய அணி இரண்டு கோல்களைப் போட்டது. உருகுவே அணிக்கு எந்த கோலையும் இந்திய அணி கொடுக்கவில்லை.
இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா அபாரா வெற்றிக் கண்டது.
இந்தியத் தரப்பில் ராணி, மோனிகா, தீபிகா, நவ்ஜோத் கெளர் ஆகியோர் தலா ஒரு கோலடித்து அசத்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.