டென்னிஸ் போட்டியிலிருந்து விலகினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்; இதுதான் காரணம்...

Asianet News Tamil  
Published : Dec 30, 2017, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
டென்னிஸ் போட்டியிலிருந்து விலகினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்; இதுதான் காரணம்...

சுருக்கம்

tennis withdrew from competition Novak Djokovic of Serbia This is the reason ...

முபாதலா டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

முபாதலா டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட்டுடன் அவர் மோதுவதாக இருந்தது.

இந்த நிலையில், ஆட்டத்துக்கு நான்கு மணி நேரம் முன்பு நோவக் ஜோகோவிச் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது, "முழங்கையில் கண்டுள்ள காயத்தில் கடந்த சில நாள்களாக வலி இருந்து வருகிறது. பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், போட்டியிலிருந்து விலகி சிகிச்சையை தொடருமாறு மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. எனவே, முபாதலா டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுகிறேன்.

அடுத்த சீசனுக்கான போட்டித் திட்டங்கள் இதனால் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வரும் நாள்களில் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன்" என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.

இதையடுத்து, பெளதிஸ்டா அகுட்டுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை களமிறக்க முடிவு செய்யப்பட்டது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI: அபிஷேக் - இஷான் ஜோடியா? தோனி ஸ்டைலில் ஒரு அதிரடி முடிவு! விண்டீஸ் போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் 11 இதுதான்!
தந்தையின் இறுதி சடங்கு முடித்த கையோடு கண்ணீருடன் களத்தில் இறங்கும் சிங்கம்! கலங்க வைக்கும் அர்ப்பணிப்பு!