அபார வெற்றிப் பெற்றது நியூசிலாந்து அணி…

Asianet News Tamil  
Published : Nov 21, 2016, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
அபார வெற்றிப் பெற்றது நியூசிலாந்து அணி…

சுருக்கம்

கிறைஸ்ட்சர்ச், 

நியூசிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றிப் பெற்றது.

நியூசிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 133 ஓட்டங்களும், நியூசிலாந்து 200 ஓட்டங்களும் எடுத்தன.

67 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 129 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 171 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 105 ஓட்டங்கள் இலக்கை நியூசியூசிலாந்து அணி 31.3 ஓவர்களில் எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் கனே வில்லியம்சன் 61 ஓட்டங்களும் (77 பந்து), அறிமுக வீரர் ஜீத் ராவல் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 25-ஆம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது.

பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக்கின் மாமனார் உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக தாயகம் திரும்புகிறார்.

இதனால் 2-வது டெஸ்டில் மிஸ்பா ஆடுவது சந்தேகம் தான்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!