தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது..! 4 வீரர்களுக்கு துரோணாச்சார்யா விருது

By karthikeyan VFirst Published Nov 14, 2022, 7:52 PM IST
Highlights

தமிழகத்தை சேர்ந்த  இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவான்  ஆகியோர் உட்பட 25 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையில் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தியான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுவருகிறது.

இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன்சி காலி..? அவங்க 2 பேரில் ஒருவர் அடுத்த கேப்டன்..?

தமிழகத்தை சேர்ந்த  இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவான்  ஆகியோர் உட்பட 25 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் சீமா புனியா, பேட்மிண்டனில் லக்‌ஷ்யா சென் மற்றும் பினாய் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவை கிண்டலடித்த அக்தருக்கு பதிலடிகொடுத்த ஷமி! அறிவுரை சொன்ன அஃப்ரிடி;அதை உங்கஆளுக்கு சொல்லுப்பா அஃப்ரிடி

துரோணாச்சாரியா விருது 4 விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

click me!