தோனி இப்படி செய்திருக்க கூடாது.. முன்னாள் வீரர் அதிருப்தி..! அப்படி என்னதான் செய்தார் தோனி?

Asianet News Tamil  
Published : Mar 12, 2018, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
தோனி இப்படி செய்திருக்க கூடாது.. முன்னாள் வீரர் அதிருப்தி..! அப்படி என்னதான் செய்தார் தோனி?

சுருக்கம்

syed kirmani opinion about dhoni and pant

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறந்த வீரர் என முன்னாள் வீரர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, சிறந்த விக்கெட் கீப்பர். டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பிங்கில் தனித்த அடையாளத்தை பெற்றுள்ள தோனி, கீப்பிங்கில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

அடுத்த ஆண்டு உலக கோப்பையுடன் தோனி, அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்பொழுதிலிருந்தே தோனியின் இடத்தை நிரப்புவதற்கான வீரரை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்க வேண்டிய கடமை இந்திய அணிக்கு உள்ளது.

தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும், அவரது அனுபவமும் ஆலோசனைகளும் விக்கெட் கீப்பிங்கும் இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை. எனவே தோனியின் இடத்தை அவ்வளவு எளிதாக யாராலும் நிரப்பிவிட முடியாது.

தோனியின் இடத்தை பிடிப்பதற்காக, அணியில் நீண்டகாலமாக நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவரும் லோகேஷ் ராகுல், கீப்பிங் பயிற்சி பெற்றுவருகிறார். தற்போது இலங்கையில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பண்டும் விக்கெட் கீப்பர் தான்.

இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான இரு போட்டிகளிலும் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தும் பண்ட், அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சையத் கிர்மானி, ரிஷப் பண்ட் சிறந்த வீரர். ஆனாலும் இளம் வீரராக உள்ள பண்ட், திறமைகளை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம் என தெரிவித்தார்.

மேலும், தோனி இவ்வளவு விரைவாக டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க கூடாது. அவரது அனுபவமும் ஆலோசனையும் இந்திய டெஸ்ட் அணிக்கு தேவை. ஆனால் அவசரப்பட்டு தோனி ஓய்வு பெற்றுவிட்டார் என கிர்மானி தெரிவித்தார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!