இந்தியன் சூப்பர் லீக்: புணேவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு அணி.

Asianet News Tamil  
Published : Mar 12, 2018, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
இந்தியன் சூப்பர் லீக்: புணேவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு அணி.

சுருக்கம்

Indian Super League Bengaluru team defeat Pune by 3-1.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தின் (ஐஎஸ்எல்) அரையிறுதியின் 2-வது பகுதி ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணியை பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் (ஐஎஸ்எல்) பெங்களூரு எஃப்சி - எஃப்சி புணே சிட்டி அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் 2-வது பகுதி ஆட்டத்தில் பெங்களூரு 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் முதல் பகுதி ஆட்டம் கோல் இன்றி டிரா ஆகியிருந்த நிலையில், 2-வது பகுதி ஆட்டத்தில் வென்றதன் அடிப்படையில் பெங்களூரு முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடிக்க, புணே தரப்பில் ஜோனதன் லுக்கா ஒரு கோல் அடித்தார். 

மற்றொரு அரையிறுதியில் மோதும் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகளுக்கு இடையேயான 2-வது பகுதி ஆட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.  இதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்தில் பெங்களூரை எதிர்கொள்ளும். 


 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!