அடுத்த இந்திய வீராங்கனையும் இடைநீக்கம்; ஊக்கமருந்து சோதனையில் தோல்வி…

 
Published : Apr 29, 2017, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
அடுத்த இந்திய வீராங்கனையும் இடைநீக்கம்; ஊக்கமருந்து சோதனையில் தோல்வி…

சுருக்கம்

Suspension of the next Indian woman Doping test fails ...

இந்திய பளு தூக்குதல் வீராங்கனை சுஷிலா பன்வார் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இப்போதுதான் இந்திய கால்பந்து வீரர் சுப்ரதா பால் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ள நிலையில், அடுத்தது இந்திய வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்து புகாரில் சிக்கியிருப்பது விளையாட்டுத் துறையினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுஷிலா பன்வார், குவாஹாட்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், 75+ கிலோ எடைப் பிரிவில் 198 கிலோவைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதுகுறித்து, இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் செயலர் சாதேவ் யாதவ் கூறியதாவது:

“பாட்டியாலாவில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளிடம் கடந்த மார்ச் 25-ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) சோதனை மேற்கொண்டது.

அப்போது, 42 பளுதூக்குதல் வீரர், வீராங்கனைகளின் மாதிரிகளில் நடத்திய சோதனையில், சுஷிலா பன்வாரின் 'ஏ' மாதிரியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக நாடா அளித்த தகவலின் பேரில், சுஷிலா பன்வார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று சாதேவ் யாதவ் கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!