மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீராங்கனை முதலிடம்…

 
Published : Apr 28, 2017, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீராங்கனை முதலிடம்…

சுருக்கம்

Chennai Womens Chess Championship

மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீராங்கனை முதலிடம் பெற்று வாகைச் சூடினார்.

திருவாரூரில், 45-வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மாவட்ட செஸ் கழகம் மற்றும் திருவாரூர் சிஏ ஹோண்டா நிறுவனம் இணைந்து வழங்கியது.

இந்தப் போட்டி ஏப்ரல் 23-ஆம் தேதி ஆரம்பித்தது. இதன் இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடந்தது.

இதில் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் சென்னை வீராங்கனை ஆர்.திவ்யலட்சுமி முதலிடம் பெற்று வாகைச் சூடினார்.

இரண்டாமிடத்தையும் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை பாலகண்ணம்மா பெற்றார். மூன்றாமிடம் வி. ரிந்தியா மூன்றாமிடத்தையும், ஈரோடு வீராங்கனை அபிராமிஸ்ரீநிதி நான்காமிடமும், சென்னை வீராங்கனை சரண்யா ஐந்தாமிடத்தையும் பெற்றனர்.

முதல் 4 இடங்கள் பெற்ற வீராங்கனைகள் 2017 ஜூலை மாதம் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க இருக்கிறார்கள்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!