குத்துச்சண்டையின் போது மயங்கி விழுந்து பலியான 9 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி ...!!

Asianet News Tamil  
Published : Jan 06, 2017, 06:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
குத்துச்சண்டையின் போது மயங்கி விழுந்து பலியான 9 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி ...!!

சுருக்கம்

குத்துச்சண்டையின் போது மயங்கி விழுந்து பலியான 9 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி ...!!

தூத்துக்குடியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென  மயங்கி விழுந்து உயிரிழந்த  சம்பவம்  தமிழகத்தையே  அதிர்ச்சிகுள்ளாக்கியது.

தூத்துக்குடியில் உள்ள , ஒரு அரசு பள்ளியில் படித்து வந்தவர் மாரீஸ்வரி .9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் குத்துசண்டை  பயிற்சியும்  பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த   குத்துச்சண்டை   போட்டியில், மாணவி மாரீஸ்வரி   கலந்துகொண்டார்.குத்துசண்டைக்கு இடையே  ஒதுக்கப்பட்ட நேரத்தில் திடீரென  மாணவி மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

உடனடியாக , மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே  அந்த மாணவி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பின்னர்,  இந்த  சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்வேறு கோணங்களில்  விசாரணை நடைபெற்று  வருகிறது.அதன்படி  மாணவி  உண்மையில் நல்ல  பயிற்சி பெற்றவரா ?மதிய வேளையில் அதிகம்   வெப்பம்  நிலவும் சமயத்தில், திறந்த வெளி மைதானத்தில், சிறுமிகளுக்கு எப்படி போட்டி  நடத்தலாம் ?  போட்டிக்கு முன் இந்த மாணவிக்கு முறையான  மருத்துவ பரிசோதனை  செய்யபட்டதா  என  பல  கோணங்களில்  விசாரணை நடைபெற்று வருகிறது,.மாணவி , திடீரென  மயங்கி  இழுந்து  உயிரிழந்த  சம்பவம்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Urvil Patel: லக்னோவை கதற விட்ட உர்வில் படேல்.. துண்டுச்சீட்டில் எழுதி இருந்த உருக்கமான செய்தி!
IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!