
ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள மாநில சப்-ஜூனியர், ஜூனியர் நீச்சல் போட்டிகளில் 650 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-ஆவது ஜூனியர் மாநில சப்-ஜூனியர், ஜூனியர் நீச்சல் போட்டிகள் சென்னை, வேளச்சேரியில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளன.
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் இந்தப் போட்டிகள் வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறுகிறது. இதில், 650 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதில் நீச்சல் போட்டிகளும், டைவிங் போட்டிகளும் இடம்பெறுகின்றன. இந்தப் போட்டிகளை தமிழக வடக்கு மண்டல ஐ.ஜி. சி.ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார்.நிறைவு நாளான ஜூன் 3-ஆம் தேதி பத்மஸ்ரீ ஷைனி வில்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.
இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், வீராங்கனைகள், வரும் ஜூன் 24-ல் புணேயில் தொடங்கவுள்ள சப்-ஜூனியர், ஜூனியர் தேசியப் போட்டிகளில் கலந்து கொள்வர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.