
மாநில அளவிலான ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை மாநகரக் காவல் துறை அணி வெற்றி பெற்று அசத்தியது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஹாக்கி கிளப் சார்பில் 5-வது ஆண்டாக மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைப்பெற்றன.
மே 9-ஆம் தொடங்கிய இந்தப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இறுதி நாளான நேற்று இறுதி ஆட்டம் நடைப்பெற்றது.
இதில், சென்னை மாநகரக் காவல் துறை அணியும், மதுரை திருநகர் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகரக் காவல் துறை அணி வென்றது.
அதன்படி, இரண்டாவது இடத்தை மதுரை திருநகர் அணியும், மூன்றாவது இடத்தை மதுரை ரிசர்வ் லைன் அணியும் பிடித்தன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.