மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: சென்னையின் சத்யபாமா பல்கலைக்கழக அணி கோப்பையை வென்றது...

 
Published : Jan 02, 2018, 12:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: சென்னையின் சத்யபாமா பல்கலைக்கழக அணி கோப்பையை வென்றது...

சுருக்கம்

State-level basketball competition Chennai Satyabhama University team won the trophy ...

மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில், சென்னையின் சத்யபாமா பல்கலைக்கழக அணி முதலிடத்தைப் பிடித்து கோப்பையை வென்றது.

தருமபுரி மாவட்டம்,  பாலக்கோடு கூடைப்பந்துக் கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன.

இதில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், கரூர் டெக்ஸ்சிட்டி அணியும், சென்னை சத்யபாமா பல்கலைக்கழக அணியும் மோதின.

இதன் இறுதியில் சத்யபாமா பல்கலைக்கழக அணி முதலிடத்தைப் பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.

இரண்டாமிடத்தை கரூர் டெக்ஸ்சிட்டி அணியும், மூன்றாமிடத்தை திண்டுக்கல் பிபிசி அணியும், நான்காமிடத்தை பாலக்கோடு கூடைப்பந்துக் கழக அணியும் பெற்றன.

இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்டன. தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகத் துணைத் தலைவர் எஸ்ஆர். வெற்றிவேல், ராதா மெட்ரிக். பள்ளித் தாளாளர் மாரியப்பன், தருமபுரி வட்டாட்சியர் அதியமான் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில், பாலக்கோடு கூடைப்பந்துக் கழகச் செயலர் குணசேகரன் வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கி சிறப்பித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா