
மாநில வலைகோல் பந்தாட்டப் போட்டியில், திருநெல்வேலி, அரியலூர், இராமநாதபுரம், மதுரை மாவட்ட அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
திருநெல்வேலியில் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் மாநில அளவிலான ஹாக்கி லீக் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஈரோடு அணியும், கிருஷ்ணகிரி அணியும் மோதின.
இந்தப் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளர் (பொறுப்பு) சார்லஸ் மனோகர் தொடங்கி வைத்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரி அணி வென்றது.
இரண்டாவது ஆட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அணியுடன் மோதிய இராமநாதபுரம் மாவட்ட அணி 2-12 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதனையடுத்து, திருநெல்வேலி, அரியலூர், இராமநாதபுரம், மதுரை மாவட்ட அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதிப் பெற்றன.
இந்தப் போட்டியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.சேவியர் ஜோதி சற்குணம், மதுரை மண்டல முதுநிலை மேலாளர் டேனியல் உள்பட பலர் பங்கேற்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.