தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் வென்ற அணிகள் இதோ…

 
Published : May 29, 2017, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் வென்ற அணிகள் இதோ…

சுருக்கம்

Here are the teams that have won the national level basketball tournament ...

தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியன் இரயில்வே அணியும், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும், மகளிர் பிரிவில் கேரள மின் வாரிய அணியும், செகந்திராபாத் - தெற்கு மத்திய இரயில்வே அணியும் வெற்றியைத் தழுவின.

கோவை மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் 52-ஆவது ஆடவர் நாச்சிமுத்து கௌண்டர் நினைவுக் கோப்பை, 16-ஆவது மகளிர் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் 26-ஆம் தேதி தொடங்கின.

இதில், மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில், இந்தியன் இரயில்வே அணியும், இந்திய கடற்படை அணியும் மோதியதில் 71-64 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் இரயில்வே அணி வென்றது.

அதேபோன்று, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியும் மோதிய ஆட்டத்தில் 89-55 என இந்தியன் ஒவர்சீஸ் வங்கி அணி வென்றது.

மற்றொரு ஆட்டத்தில், சென்னை வருமான வரித் துறை அணியும், சி.ஆர்.பி.எஃப். அணியும் மோதின. இதில், 77-61 என்ற கணக்கில் சென்னை வருமான வரித்துறை அணி வென்றது.

மகளிர் பிரிவு ஆட்டத்தில், கேரள மின் வாரிய அணி 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் குவாஹாட்டி - வடக்கு எல்லைப்புற (ஃபிராண்டியர்) இரயில்வே அணியை வீழ்த்தியது.

அதேபோன்று செகந்திராபாத் - தெற்கு மத்திய இரயில்வே அணி 74-60 என்ற கணக்கில் கோவை மாவட்ட அணியை துவம்சம் செய்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!