
தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியன் இரயில்வே அணியும், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும், மகளிர் பிரிவில் கேரள மின் வாரிய அணியும், செகந்திராபாத் - தெற்கு மத்திய இரயில்வே அணியும் வெற்றியைத் தழுவின.
கோவை மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் 52-ஆவது ஆடவர் நாச்சிமுத்து கௌண்டர் நினைவுக் கோப்பை, 16-ஆவது மகளிர் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் 26-ஆம் தேதி தொடங்கின.
இதில், மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில், இந்தியன் இரயில்வே அணியும், இந்திய கடற்படை அணியும் மோதியதில் 71-64 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் இரயில்வே அணி வென்றது.
அதேபோன்று, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியும் மோதிய ஆட்டத்தில் 89-55 என இந்தியன் ஒவர்சீஸ் வங்கி அணி வென்றது.
மற்றொரு ஆட்டத்தில், சென்னை வருமான வரித் துறை அணியும், சி.ஆர்.பி.எஃப். அணியும் மோதின. இதில், 77-61 என்ற கணக்கில் சென்னை வருமான வரித்துறை அணி வென்றது.
மகளிர் பிரிவு ஆட்டத்தில், கேரள மின் வாரிய அணி 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் குவாஹாட்டி - வடக்கு எல்லைப்புற (ஃபிராண்டியர்) இரயில்வே அணியை வீழ்த்தியது.
அதேபோன்று செகந்திராபாத் - தெற்கு மத்திய இரயில்வே அணி 74-60 என்ற கணக்கில் கோவை மாவட்ட அணியை துவம்சம் செய்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.