செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன்: இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை காலிறுதிக்கு முன்னேற்றம்…

 
Published : Sep 22, 2017, 10:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன்: இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை காலிறுதிக்கு முன்னேற்றம்…

சுருக்கம்

St Petersburg Open India Leander Paes - Purav Raja advances to the quarter-finals ...

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை காலிறுதிக்கு முன்னேறியது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை, இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி - அமெரிக்காவின் ஜேம்ஸ் செரட்டானி இணையுடன் மோதியது.

இதில், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஃபாபியோ ஃபாக்னினி - ஜேம்ஸ் செரட்டானி இணையைத் தோற்கடித்தது பயாஸ் - பூரவ் இணை.

பயஸ் – பூரவ் இணை தங்களின் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் - பிரேசிலின் மார்செலோ டெமாலினர் இணையுடம் மோதுகிறது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு