விரைவில் இந்தியா பலமான அணியாக உருவெடுக்கும் - டேபிள் டென்னிஸ் வீரர் உறுதி...

Asianet News Tamil  
Published : Apr 21, 2018, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
விரைவில் இந்தியா பலமான அணியாக உருவெடுக்கும் - டேபிள் டென்னிஸ் வீரர் உறுதி...

சுருக்கம்

Soon India will be a strong team - table tennis player confirmed ...

விரைவில் இந்தியா பலமான அணியாக உருவெடுக்கும் என்று டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் கூறியுள்ளார்.

இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தா. அதில் அவர் கூறியதாவது:

"வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. முதலாவது காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றது சிறந்த அனுபவமாக உள்ளது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற போதிலும், காமன்வெல்த் போட்டிகள் வேறு வகையில் இருந்தது. 

கடும் சவாலை சந்தித்த நிலையில் பல நுணுக்கங்களை கற்றேன். மூன்று பதக்கங்களை வென்றது பெரிய சாதனையாகும். சுவீடனில் நடக்கவுள்ள உலகப் போட்டிக்கு தயாராக வேண்டியுள்ளது. அது ஒரு கனவாகும்.

சீனா, ஜப்பான், கொரியா, போன்ற பலமான அணிகளை எதிர்கொள்ள வேண்டும். அதில் பதக்கம் வெல்வதையே இலக்காகக் கொண்டு செயல்படுவோம். ஆசியப் போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வேண்டும். 

மகளிர் பிரிவில் மனிகா ஒற்றையர் பிரிவில் சிறப்பாக ஆடினார். டேபிள் டென்னிஸ் தற்போது சரியான திசையில் சென்று வருகிறது. விரைவில் இதில் இந்தியா பலமான அணியாக உருவெடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி