
இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.
இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து மற்றும் உலகின் 20-ஆம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் பார்ன்பவி சோசுவாங்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் பார்ன்பவியை வெற்றி பெற்றார்.
சிந்து தனது 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானோனை எதிர்கொண்டார்.
அதில், 17-21, 21-18, 21-12 என்ற செட் கணக்கில் ரட்சனோக்கை வீழ்த்தினார் நெவால்.
சாய்னா அடுத்த சுற்றில் தாய்லாந்தின் நிட்சாவ்ன் ஜின்டாபோலை சந்திக்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.