
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து தனது 2-ஆவது சுற்றில் 21-12, 21-4 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் டினார் தியாவைத் வீழ்த்தினார்.
மற்றொரு 2-ஆவது சுற்றில் சாய்னா நெவால் 21-8, 21-10 என்ற நேர் செட்களில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை தோற்கடித்தார்.
சாய்னாவும், சிந்துவும் தங்களின் காலிறுதி ஆட்டங்களில் வென்றால், இருவரும் அரையிறுதியில் மோதிக் கொள்வர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.