உலக சிலம்பாட்ட போட்டி – 40 பதக்கங்களுடன் தமிழகம் வந்த வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

Published : Feb 06, 2024, 01:29 PM IST
உலக சிலம்பாட்ட போட்டி – 40 பதக்கங்களுடன் தமிழகம் வந்த வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

சுருக்கம்

மலேசியாவில் நடந்த உலக சிலம்பாட்ட போட்டியில் தமிகழத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இணைந்து 5 தங்கம், 23 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என்று மொத்தமாக 40 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

மலேசியாவில் உலக சிலம்பாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, மலேசியா, இந்தினேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 600 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் தமிழகத்திலிருந்து 160 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலம்பத்தை முன்னும் பின்னும் சுற்றிச் சென்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் – பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வாய்ப்பு!

இதன் மூலமாக ஒரே இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 160 வீரர்கள் தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி மலேசியாவின் சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இணைந்து 5 தங்கம், 23 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என்று மொத்தமாக 40 பதக்கங்களை கைப்பற்றியுள்ள சாதனையோடு நாடு திரும்பியுள்ளனர். சென்னை வந்த அவர்களுக்கு தமிழ்நாடு சிலம்பாட்ட கூட்டமைப்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?