கங்குலி, டிராவிட், தோனி.. கேப்டன் யாரா வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்!! சச்சின் தான் மாஸ்.. சேவாக் ஓபன் டாக்

Asianet News Tamil  
Published : Jun 11, 2018, 02:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
கங்குலி, டிராவிட், தோனி.. கேப்டன் யாரா வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்!! சச்சின் தான் மாஸ்.. சேவாக் ஓபன் டாக்

சுருக்கம்

sehwag revealed how sachin gave instructions to various indian skippers

யார் கேப்டனாக இருந்தாலும், சச்சின் அறிவுரைகளை வழங்குவார் என சேவாக் தெரிவித்துள்ளார். 

சச்சினும் சேவாக்கும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர். அப்போது, பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர். இருவரும் பரஸ்பர உறவு உள்ளிட்ட பல கருத்துகளை பகிர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் சச்சினும் சேவாக்கும் பேசியதன் மூலம் பல தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சேவாக், இந்திய அணியில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கேப்டன்களாக இருந்தவர்களுக்கு கள வியூகங்களில் சச்சின் அளித்த ஆலோசனைகள் குறித்தும் பேசினார். அப்போது, 2011 உலக கோப்பை இறுதி போட்டியில், யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக தோனி இறங்குமாறு அறிவுறுத்தியது சச்சின் தான் என தெரிவித்தார். சேவாக் கூறிய இந்த தகவல், ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

மேலும் பேசிய சேவாக், யார் கேப்டனாக இருந்தாலும் சச்சின் அறிவுரை வழங்குவார். அது தாதாவோ(கங்குலி) ராகுலோ தோனியோ, யாராக இருந்தாலும் சச்சின் அறிவுரை வழங்குவார். ஆனால் நேரடியாக கூறமாட்டார்.

ஒரு மெசேஞ்சர் மூலமாகவே கேப்டன்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார். அவர் நேரடியாக தோனியிடம் கூறிய ஒரே ஆலோசனை, யுவராஜுக்கு முன்னதாக தோனியை களமிறங்குமாறு கூறியதுதான் என சேவாக் தெரிவித்தார். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?