
தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரரான சரத் கமலுக்கு ரூ. 2.2 இலட்சம் பரிசு வழங்கப்பட்டது.
ஹரியாணா மாநிலம் மனேசரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சரத் கமல் 11-8, 6-11, 11-9, 3-11, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் செளம்யஜித் கோஷை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் மதுரிகா 11-5, 11-9, 11-5, 12-10 என்ற நேர் செட்களில் 6 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவரான பௌலமி கடக்கை தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் செளம்யஜித் கோஷ்-ஜுபின் குமார் ஜோடி 11-3, 7-11, 11-6, 8-11, 11-5 என்ற செட் கணக்கில் சுஷ்மித் ஸ்ரீராம்-அனிருபன் கோஷ் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் ஆனது.
மகளிர் இரட்டையர் பிரிவில் அனின்திதா சக்ரவர்த்தி-சுத்ரிதா முகர்ஜி ஜோடி 11-8, 11-8, 4-11, 11-3 என்ற நேர் செட் கணக்கில் போலோமி கடக்-மெளதா தாஸ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
கலப்பு இரட்டையர் பிரிவில் அர்ஜுன் கோஷ் - சுத்ரிதா முகர்ஜி ஜோடி 11-9, 11-5, 11-9 என்ற நேர் செட்களில் சனில் ஷெட்டி - பூஜா சஹஸ்ராபுதே ஜோடியை தோற்கடித்து சாம்பியன் ஆனது.
சரத் கமலுக்கு ரூ.2.2 இலட்சமும், மதுரிகாவுக்கு ரூ.1.2 இலட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.